உடுமலை அருகே குருமலை பகுதியில் மலை கிராமத்தில் சிறப்பு ஆதார் சேவை முகாம்

ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது எனவும், இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனவும் மலைவாழ்மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்குள்ள பொறுப்பாரு, கோடந்தூர், ஆட்டுமலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல், குருமலை, குலிப்பட்டி, மேல்குருமலை, காட்டுப்பட்டி, கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டை புதிதாக எடுத்தல், திருத்தம், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்காக உடுமலை பகுதிக்கு வரவேண்டிய சூழல் இருந்தது. இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் உயிரை பணயம் வைத்து பயணித்து அடிவார பகுதிக்கு வருகை தந்து வாகனத்தை பிடித்து உடுமலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

அதுவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இதனால் ஆதாரை மையமாகக் கொண்ட பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறுவதிலும் தடங்கல்கள் நிலவி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து மலைவாழ் கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் குருமலை பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. நாளை குலிப்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் நாங்கள் பெருத்த சிரமத்துக்கு இடையில் உடுமலைக்கு சென்று வர வேண்டிய நிலை மாறி உள்ளது.அதுமட்டுமின்றி வயதானவர்கள் குழந்தைகள் எளிதாக பதிவு செய்ய முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...