வீரோ கே வீர் இந்தியக் கட்சி 2024ல் எம்.பி தேர்தலில் தனித்து போட்டியிடும் என கோவையில் நிர்வாகிகள் அறிவிப்பு

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் தெரிவித்தார்.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக "வீரோ கே வீர்” இந்தியக் கட்சி 2024ல் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 543 இடங்களிலும் ஓய்வு பெற்ற முப்படை இராணுவ வீரர்கள் எம்.பி வேட்பாளர்களாக போட்டியிட இருக்கிறார்கள். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று(பிப்.14) காலை கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.



இது குறித்து, வீரோ கே கேர் கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் கூறுகையில், தேசமும், அதன் நாட்டு மக்களும் இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்களைப் பற்றி முற்றிலும் பெருமை பாராட்டுகிறார்கள். ஏனெனில் இராணுவ வீரர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், உண்மையுள்ளவர்கள், ஒழுக்கமானவர்கள், படித்தவர்கள்.

2024ல் தேர்தலில் போட்டியிடும் 'வீரோ கே வீர்" இந்திய கட்சி இந்தியாவை வலிமையான மற்றும் வளர்ந்த தேசமாக உருவாக்க வேண்டும். இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்கள் நாட்டிற்கு தங்களின் வாழ்வின் பொற்காலத்தைக் கொடுத்துள்ளார்கள், எனவே முப்படை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே நாட்டின் பொன்னான நேரத்தைக் கொண்டு வர முடியும்.

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர எம். பி. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...