போதிய மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கிய வால்பாறை அணைகள்

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்ததால் வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அணைகள் வறண்ட மண்மேடுகளாக காட்சியளிக்கின்றது.

 

வால்பாறையில் ஆண்டுதோறும்  ஜுன் மாதம் மழை தொடங்கி 6 மாதங்களுக்கு விட்டுவிட்டு பெய்துவரும். இந்த ஆண்டு சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியில் 131 அடியைமட்டுமே எட்டியுள்ளது. இதனால் மாணாம்பள்ளி, சோலையார் அணையில் உள்ள 2 நீர் மின்நிலையங்களும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் கடைசியிலேயே சோலையார் ஆணை முழுகொள்ளளவை எட்டி 123 நாட்கள் முழுகொள்ளளவிலேயே இருந்த நிலையில் அணை மூன்று முறை திரந்து விடப்பட்டது.



2015-ம் ஆண்டும் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியதால் ஒரு முறை திறந்து  விடப்பட்ட நிலையில் மழை குறைவால் நீர்வரத்து குறையத் தொடங்கியது.



ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் ஆண்டு இறுதி வரையிலும் அதிகமழை பெய்யாதிருப்பதால் வால்பாறை சோலையார் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையின் நீர்மட்டம் 3.34 அடியில் உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...