மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

முப்பெரும் விழாவில் உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும், கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என மாணவர்களுக்கு கருத்துக்களை கூறினார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிறைவிழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.

மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் பத்ரி நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என கருத்துக்களை கூறினார்.



மேலும் நீதிபதிகள் விஜயகுமார், பாலமுருகன், மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவரும், வழக்கறிஞர் அரசு வழக்கறிஞருமான டி.ஆர். மனோகரன் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்.

எஸ்.எம்.சி. தலைவர் கவிதா மற்றும் உறுப்பினர்கள் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மடத்துக்குளம் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். இலக்கியம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

100 சதவீதம் வருகை புரிந்தோர், அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு மேல்நிலைப்பள்ளி மடத்துகுளத்திற்கு அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டு இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி கௌரவத்தினர். இதில், மாணவர்களின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக பட்டதாரி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...