பொள்ளாச்சியில் புனரமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்தார் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் என்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக ஒரு கோடியை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மின்மேட்டர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று பணியில் முடிவுற்றது சுத்திகரிப்பு நிலையத்தை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கமிஷனர் சுப்பையா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நகர மன்ற தலைவர், கடந்த 10 ஆண்டுகளில் பொள்ளாச்சி நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீருக்கு தேவையான உபகரணங்களை வாங்காமல் கடந்த கால ஆட்சியாளர் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.



இதனால் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூழல் நிலவியது. திமுக அரசு பொறுப்பேற்றுடன் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் மோட்டார்கள் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...