உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு – நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில், தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் விலையும் தக்காளிகளை உடுமலை சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கேரள மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. மழைப்பொழிவு காரணமாக தற்பொழுது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தக்காளி தரமில்லாமல் மாறி மகசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை செய்துள்ளது.

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக செடிகள் காய்ந்தும் காய்கள் வெளிர் நிறத்துக்கு மாறியும் பெருமளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விலையும் சரிந்து வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...