அதிமுகவுக்கு நிரந்தர எதிரி திமுக தான் - கோவையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை. அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜைகள் மற்றும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து குடிநீர் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியது மாநில அரசின் கடமை, அதிமுக மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று மக்கள் திட்டங்களை செய்தது.

அதே நடைமுறையை திமுக பின்பற்ற வேண்டும். அதிமுகவை பொருத்தவரை திமுக என்ற கட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுகவுக்கு திமுக நிரந்தர எதிரி தான் என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...