கோவை மாவட்டம், மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான மை ஷாப்பிங் மை பேக் எக்போ 2017 கண்காட்சி ஞாயிறன்று (மார்ச் 26) நடைபெற்றது.

இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத மரத்தாலான பொருட்கள், இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
இதனைத்தொடர்ந்து, இக்கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.