தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.28 கோடி மதிப்பிலான சாலை விரிவுபடுத்தும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், கோவைப்புதூர், சுண்டக்கமுத்தூர், ஆறுமுககவுண்டன்புதூர், நரசிபுரம், தென்னமநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.28 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவுபடுத்தும் பணிக்கான பூமிபூஜையை துவக்கி வைத்து இரண்டு உயர்மட்டப்பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை விரிவுபடுத்துவதற்கான பூமி பூஜை மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் புதிய திட்டப்பணிகளுக்கான பூமிபூஜையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சேலம் - கொச்சின் சாலையில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியினையும், மேலும், 162/10 ஓடையின் குறுக்கே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலம் கட்டுவதற்கும், 87 வது வார்டு பகுதியில் அரசு பொது நிதியிலிருந்து 11.82 கோடி மதிப்பில் பாலக்காடு சாலை, புட்டுவிக்கி இணைப்பு சாலை, தடுப்புச்சுவருடன் அமைப்பதற்கும், சேலம் கொச்சின் சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பால்தளம் அமைப்பதற்கும் பூமிபூஜையினை துவக்கி வைத்தார்.

மேலும் இதேப்போன்று, கோவைப்புதூர் சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்தை மூன்று வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கும், குனியமுத்தூர் முதல் சுண்டக்காமுத்தூர் வரை உள்ள சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கும், சுண்டக்காமுத்தூர் சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கும், சுண்டக்காமுத்தூர் முதல் நரசிபுரம் சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பில் சாலைகளை பயன்படுத்துவதற்கும், மேலும் நரசிபுரம் சாலையை ரூ.1.30 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் சிறுபாலம் கட்டும் பணிக்கும் பூஜையினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இதேப்போன்று, நரசிபுரம் சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை விரிவுபடுத்தும் பணிக்கும், வெள்ளருக்கம்பாளையம் சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப்பணிக்கும், சிறுவாணி முதல் நரசிபுரம் சாலையில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் ஒருவழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றுவதற்கான பணிக்கும் என மேலும் சில பணிகளுக்காக அமைச்சர் பூமி பூஜையினை துவக்கி வைத்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்டப்பாலத்தினையும், வடிவேலம்பாளையம் நாதேகவுண்டன்புதூர் பகுதியில் ரூ.81.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட உயர்மட்டப்பாலத்தையும், அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்ததுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார், ரூ.27 கோடி அளவிற்கு புதிய பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். 

பின்னர், குளத்துப்பாளையம் பகுதியில் வருவாய் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.93 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர்கள் (பேரூராட்சி) கணேஷ்ராம், (ஊராட்சிகள்) கருப்பையா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...