சாட்டையடித்து பிழைக்கும் சுமார் 30 குடும்பங்கள் கோவை காந்திபார்க் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வந்தவர்கள் பிளேடால் தங்களது கைகளை கீரியும், சாட்டையினைக் கொண்டு தங்களை அடித்துக் கொண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதயைடுத்து, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்து அழைத்துச் சென்று மனு அளிக்க செய்தனர்.
இது குறித்து சாட்டையடித்து பிழைப்பவர்கள் கூறும்போது, மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தங்கி வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் தற்போது விரட்டுவதாகவும், வாழ வழியின்றி தவிப்பதாகசம் வேதனை தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.