2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பாஜக அரசு பெற்றுள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூர் திடலில் மத்திய அரசு மோடியின் ஆட்சியில் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்றது.

இதில் பாஜக சார்ந்த கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி அதற்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.5,270 கோடி வசூல் செய்து தேர்தல் பத்திர திட்டங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்த போதும் இந்தத் தொகை யாரிடம் பெறப்பட்டது என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க முடியாத அளவிற்கு சட்ட திருத்தத்தை மோடி அரசு செய்துள்ளது. 2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பெற்றுள்ளது.
இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மோடி அரசின் தேர்தல் பத்திரமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி உட்பட ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பாஜக சார்ந்த கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி அதற்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.5,270 கோடி வசூல் செய்து தேர்தல் பத்திர திட்டங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்த போதும் இந்தத் தொகை யாரிடம் பெறப்பட்டது என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க முடியாத அளவிற்கு சட்ட திருத்தத்தை மோடி அரசு செய்துள்ளது. 2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பெற்றுள்ளது.
இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மோடி அரசின் தேர்தல் பத்திரமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி உட்பட ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.