கோவையில் மாநில அளவிலான காவல்துறை மண்டலங்களிடையேயான தடகள மற்றும் சைக்கிள் விளையாட்டுப் போட்டி

வரும் காலத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சிக்காக உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய அளவில் குதிரை ஓட்டப் பந்தயம் தமிழகத்தில் நடக்க உள்ளது என தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


கோவை: கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான காவல்துறை மண்டலங்களிடையேயான தடகள மற்றும் சைக்கிள் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றன.



இந்த போட்டியில் 687 காவல்துறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.



இறுதி நாளில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் மற்றும் கூடுதல் காவல் துறை ஆயுதப்படை இயக்குனர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய காவல் துறை இயக்குனர் சங்கர் ஜிவால், போலீசாருக்கு அதிக வேலைகள் இருக்கிறது. அந்த வேலைகளுக்கு நடுவே பயிற்சி பெறுவதற்கு நேரம் குறைவாகவே உள்ளது. இவ்வாறான வேலைகளில் நடுவே போலீசார் பயிற்சி பெற்று விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த 63வது காவல்துறை தடகளப் போட்டியில் மொத்தம் 14 சாதனைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 12 சாதனைகளை பெண்களே நிகழ்த்தியுள்ளனர். பயிற்சியை செய்வது என்பது ஒரு இடைவெளி மாதிரி இருக்கிறது. நம்மிடம் உள்ளவர்களே பயிற்சி அளிக்கின்றனர். நல்ல பயிற்சியாளர்களை தனியார் மற்றும் அரசு துறைகளிலிருந்து நியமிக்கலாம்.

ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் இதை பரிசீலிக்க வேண்டும். மேலும் தமிழக காவல்துறையில் நிறைய திறமையாளர்கள் இருக்கின்றனர். பயிற்சிக்காக சொந்த செலவில் பெங்களூர் செல்கிறார்கள். அதற்கு பதிலாக அரசளவில் தேர்வு செய்து அனுப்பலாம். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் பொருட்களை வருடம் தோறும் வழங்கலாம். கடந்த சில மாதங்களில் அரசு விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி வருகிறது.

வரும் காலத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சிக்காக உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய அளவில் குதிரை ஓட்டப் பந்தயம் தமிழகத்தில் நடக்க உள்ளது. விளையாட்டில் ஏற்படும் காயங்களை விளையாட்டு வீரர்கள் உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த பங்கேற்கும் போட்டியில் திறமையை வெளிப்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...