கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்குறைதீர் கூட்டத்தில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தன் விருப்ப கொடை நிதியில் இருந்து 15 பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட கலால் துணை ஆணையர் து.வெங்கடாச்சலம் ஆகியோர் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தன் விருப்ப கொடை நிதியில் இருந்து 15 பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட கலால் துணை ஆணையர் து.வெங்கடாச்சலம் ஆகியோர் உள்ளனர்.