பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக் கடையினை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை கணபதி பகுதி 45-வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யபட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் அமைவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



கடந்த 18 ஆண்டுகளாக கணபதி, 45-வது வார்டில் இயங்கி வந்த மதுபான கடை எண்: 1548 பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபானக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இந்த மதுபானக் கடை அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் வழிபாடு தலங்கள் உள்ள பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என போராட்டஙகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கிருந்து மேற்குறிப்பிட்ட கடை அகற்றப்பட்டது. இக்கடையினால், இதுவரை வாகன விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழிந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு அங்கு மதுபான கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...