கோவை கணபதி பகுதி 45-வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யபட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் அமைவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளாக கணபதி, 45-வது வார்டில் இயங்கி வந்த மதுபான கடை எண்: 1548 பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபானக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, இந்த மதுபானக் கடை அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் வழிபாடு தலங்கள் உள்ள பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என போராட்டஙகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கிருந்து மேற்குறிப்பிட்ட கடை அகற்றப்பட்டது. இக்கடையினால், இதுவரை வாகன விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழிந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு அங்கு மதுபான கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.