துப்புரவு தொழிலாளர் முதல் யானை பாகன் வரை கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.1000 வழங்கபட வேண்டும் என வலியுறுத்தி சமத்துவ கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்தனர்.

தற்பொது கூலி தொழிலாளர்களுக்கு 250ல் இருந்து 450 ரூபாய் வரை தான் கூலி வழங்கப்பட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வால் சாதாரன மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் குறைந்த பட்சம் கூலி ரூ.1000-க்கும் மேல் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கல், துடைப்பத்துடன் சமத்துவ கழகத்தினர் மனு அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.