கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்று சூழல், கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றை பாடலாக பாடி எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார்-மஹாலஷ்மி தம்பதியினர். இவர்களது 13 வயது மகள் ஜனிக்கா ஸ்ரீ. இவர், வாசவி வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறு வயதில் இருந்தே நாட்டுபுற பாடல்களில் ஆர்வம் கொண்ட அவர், சிறு சிறு நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவையின் பெருமையை பாடி அசத்தி உள்ளார். கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்று சூழல், கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றை பாடலாக பாடி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (பிப்.18) இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரது இந்த பாடலை கோவை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சிறு வயதில் இருந்தே நாட்டுபுற பாடல்களில் ஆர்வம் கொண்ட அவர், சிறு சிறு நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவையின் பெருமையை பாடி அசத்தி உள்ளார். கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்று சூழல், கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றை பாடலாக பாடி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (பிப்.18) இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரது இந்த பாடலை கோவை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.