கோவை உக்கடம் பகுதியில் கார்பைட் கற்கள் மற்றும் எலீசியம் என்னும் இராசயன பொடி மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஐந்தரை டன் எடையுள்ள மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கிருந்த கடைகளில் சப்போட்டா மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் மற்றும் எலீசியம் என்ற இராசயன பவுடர் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்று இடங்களில் சுமார் 5 டன் அளவிற்கு இருந்த மாம்பழங்கள், சப்போட்டா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு குப்பைகளில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய், தற்போது கோடைகாலம் என்பதால் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்பைடு கற்களை பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற கற்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் கார்பைடு கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைப்பது தொடர்கிறது. தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தீலின் என்ற பொடியை புதிதாக பயன்படுத்தி வருவதும் சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த பழங்களை சாப்பிடுவதன் காரணமாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் உட்பட பலவித நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற சோதனைகள் மாவட்டம் முமுவதும் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய் தெரிவித்தார்.
கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கிருந்த கடைகளில் சப்போட்டா மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் மற்றும் எலீசியம் என்ற இராசயன பவுடர் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்று இடங்களில் சுமார் 5 டன் அளவிற்கு இருந்த மாம்பழங்கள், சப்போட்டா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு குப்பைகளில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய், தற்போது கோடைகாலம் என்பதால் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்பைடு கற்களை பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற கற்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் கார்பைடு கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைப்பது தொடர்கிறது. தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தீலின் என்ற பொடியை புதிதாக பயன்படுத்தி வருவதும் சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த பழங்களை சாப்பிடுவதன் காரணமாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் உட்பட பலவித நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற சோதனைகள் மாவட்டம் முமுவதும் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய் தெரிவித்தார்.