கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 46-வது வார்டுக்குட்பட்ட கணபதி, பூந்தோட்டம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பூந்தொட்டம் பகுதியில் மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகத்தில் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி ஆயுர்வேத மருத்துவமனையையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் பிரபாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பூந்தொட்டம் பகுதியில் மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகத்தில் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி ஆயுர்வேத மருத்துவமனையையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் பிரபாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.