கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி பயிற்சி

சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி மற்றும் ஒயிலாட்ட பயிற்சி வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கோவையில் சிகரம் கலைக்குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கலைக்குழு வாயிலாக தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், வள்ளி கும்மி, ஜமாப் மற்றும் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளித்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒயிலாட்டமும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 5 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...