சசிகுமார் கொலையில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்கள் துண்டு பிரசுரங்களில் வெளியீடு

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யபட்டார். 

இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக சசி குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் விசாரணை செய்த போலீசார் அதில் சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.  

தொடர்ந்து, தங்களுக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று அப்புகைப்படத்தில் இருந்த நபர்கள் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் வந்து ஒப்புதல் கொடுத்தனர். இதன் பின்னர், கொலை வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சசிகுமார் கொலை தொடர்பாக தேடப்பட்டுவரும் நபர்களின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி.  போலீசார் வெளியிட்டனர். இதுவரை துப்பு ஏதும் கிடைக்காததால் தற்போது தேடப்படும் நபர்களின் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பில், கோவை சாய்பாபா காலனி பகுதிய சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரது மகன் முபாரக் (37) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்பவரது மகன் சதாம் உசேன் (25) ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

பொதுமக்களுக்கு இந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளும்படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

( தொலைபேசி எண்கள் : 9498104409 / 9498174230 / 0422-2241752 / 044-28512510 )

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...