தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக மாணவர்களின் எழுச்சி பேரணி கோவை கோட்டைமேடு வின்செட் ரோட்டில் துவங்கியது.
இதனை சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் சி.எப்.ஐ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி மாநாடு நடைபெறும் நல்லாயன் சமூகக்கூடத்தில் நிறைவு பெற்றது.

பின்னர், கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா தலைமையில் மாநில மாணவ எழுச்சி மாநாடு துவங்கியது. சி.எப்.ஐ மாவட்ட தலைவர் கே.பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் தேசிய தலைவர் பி.வி சுஹைப், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், எழுத்தாளர் மதிமாறன், சி.எப்.ஐ தேசிய குழு உறுப்பினர் நூரா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.
இதனை சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் சி.எப்.ஐ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி மாநாடு நடைபெறும் நல்லாயன் சமூகக்கூடத்தில் நிறைவு பெற்றது.

பின்னர், கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா தலைமையில் மாநில மாணவ எழுச்சி மாநாடு துவங்கியது. சி.எப்.ஐ மாவட்ட தலைவர் கே.பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் தேசிய தலைவர் பி.வி சுஹைப், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், எழுத்தாளர் மதிமாறன், சி.எப்.ஐ தேசிய குழு உறுப்பினர் நூரா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.