கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு

தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக மாணவர்களின் எழுச்சி பேரணி கோவை கோட்டைமேடு வின்செட் ரோட்டில் துவங்கியது.

 

இதனை சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில்  சி.எப்.ஐ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி மாநாடு நடைபெறும் நல்லாயன் சமூகக்கூடத்தில் நிறைவு பெற்றது.



பின்னர், கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா தலைமையில் மாநில மாணவ எழுச்சி மாநாடு துவங்கியது. சி.எப்.ஐ மாவட்ட தலைவர் கே.பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் தேசிய தலைவர் பி.வி சுஹைப், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், எழுத்தாளர் மதிமாறன், சி.எப்.ஐ தேசிய குழு உறுப்பினர் நூரா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...