தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஏப்ரல் 2017 இறுதியில் நடைபெற உள்ளது. இந்த எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்வு வரை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கென தனியே இலவச பயிற்சி வகுப்பும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயிற்சி பெற்று ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியை பெற்று பயடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கென தனியே இலவச பயிற்சி வகுப்பும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயிற்சி பெற்று ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியை பெற்று பயடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.