டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Coimbatore: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீதான மத்திய அரசின் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(IAL), அகில இந்திய வழக்குரைஞர்கள்சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

IAL மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அர்ஜுனன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், PUCL தேசிய செயலாளர் தோழர் ச.பாலமுருகன், மாவட்டச்செயலாளர் தோழர் சேகர் அண்ணாதுரை, AUSJ மாவட்டச் செயலாளர் தோழர் வெண்மணி, AILU மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதிகுமார், IAL மாவட்டத்தலைவர் இரவி, மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, ஒன்றிய பிஜேபிக்கு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
IAL மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அர்ஜுனன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், PUCL தேசிய செயலாளர் தோழர் ச.பாலமுருகன், மாவட்டச்செயலாளர் தோழர் சேகர் அண்ணாதுரை, AUSJ மாவட்டச் செயலாளர் தோழர் வெண்மணி, AILU மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதிகுமார், IAL மாவட்டத்தலைவர் இரவி, மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, ஒன்றிய பிஜேபிக்கு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.