ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவியல் துறையில் ஐஇஇஇ நிறுவனத்தின் எபிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.1,45,241 நிதியாக பெறப்பட்டது. இந்த நிதியானது மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதி நவீன சக்கர நாற்காலியானது கோவையில் உள்ள அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு வழக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சக்கர நாற்காலியின் சிறப்பு அம்சங்கள்:-
நாற்காலியை படுக்கை போன்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக்கின் உதவிகொண்டு மருத்துவமனைக்கு உள்ளே வெளியே மற்றொருவரின் உதவியில்லாமல் தன்னிச்சையாக இடம் பெயரலாம். இந்நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஜிபிஆர்எஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து அவர்களை பாதுகாக்க முடியும்.
