நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.
கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் குண்டம் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபட்ட பின்னர் கோவில் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி வந்தனர். சயன கோலத்தில், மயான தேவதையின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.

பின்னர் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபட்ட பின்னர் கோவில் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி வந்தனர். சயன கோலத்தில், மயான தேவதையின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.
பின்னர் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.