பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் குண்டம் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபட்ட பின்னர் கோவில் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி வந்தனர். சயன கோலத்தில், மயான தேவதையின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.



பின்னர் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...