கோவை கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்ததை தீயணைப்புத்துறையினர் 45 நிமிடம் போராடி அணைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அன்னுார், கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர் தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், 45 நிமிடம் போராடி, நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அன்னுார் பகுதியில், 45 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...