கோயம்புத்தூர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ், ஆகியவை விரைந்து கிடைக்க வழி செய்யும் வகையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே இவை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


கோவை: கோயம்புத்தூர் கொடிசியா திறந்தவெளி மைதானத்தில் இன்று (23.02.2024) தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும், "பெற்றோர்களைக் கொண்டாடுவோம் " கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

உடன் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன்., கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஸ்வேதா சுமன், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜா முருகன், இணை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ர. பாலமுரளி ஆகியோர் இருந்தனர்.



இதனிடையே, தமிழக அரசின் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டத்தின் துவக்க விழா கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (பிப்.23) நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசினார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஸ்வேதாசுகன் முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதார் பதிவு திட்டத்தை துவக்கி வைத்தார்.



அதைத்தொடர்ந்து அவர் பேசும்போது ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமான வரி சான்றிதழ், போன்றவற்றிற்காக அரசு அலுவலகங்களை தேடி பெற்றோர்கள் செல்வதை தவிர்க்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ், ஆகியவை விரைந்து கிடைக்க வழி செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியிலேயே இவை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர் மாரி செல்வி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...