காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று போக்குவரத்தில் மாற்றம்

காரமடை நகரில் தேரோட்டம் துவங்கியதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், காந்திநகர், நாக்குபெட்டா நகர், பெள்ளாதி வழியாக திருப்பி விடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (பிப்.24) மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து காரமடை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காரமடை நகரில் தேரோட்டம் துவங்கியதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், காந்திநகர், நாக்குபெட்டா நகர், பெள்ளாதி வழியாக திருப்பி விடப்படும்.

அதேபோன்று கோவையில் இருந்து வரும், அனைத்து வாகனங்களும், பெட்டதாபுரம் வளைவில் திரும்பி, ஏழுசுழி, தோலம்பாளையம் சாலை, மங்கலக்கரை வழியாக, மேட்டுப்பாளையம் சென்றடையும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள், இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, காரமடை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...