காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று போக்குவரத்தில் மாற்றம்

காரமடை நகரில் தேரோட்டம் துவங்கியதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், காந்திநகர், நாக்குபெட்டா நகர், பெள்ளாதி வழியாக திருப்பி விடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (பிப்.24) மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து காரமடை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காரமடை நகரில் தேரோட்டம் துவங்கியதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், காந்திநகர், நாக்குபெட்டா நகர், பெள்ளாதி வழியாக திருப்பி விடப்படும்.

அதேபோன்று கோவையில் இருந்து வரும், அனைத்து வாகனங்களும், பெட்டதாபுரம் வளைவில் திரும்பி, ஏழுசுழி, தோலம்பாளையம் சாலை, மங்கலக்கரை வழியாக, மேட்டுப்பாளையம் சென்றடையும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள், இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, காரமடை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...