முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா- கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினர்.


கோவை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை தமிழக முழுவதும் அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதே போல் வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த செ.தாமோதரன் அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் மதுக்கரை நகரச் செயலாளர் சண்முகராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, காந்திநகர் கிளைச் செயலாளர் சிவலிங்கம், கிணத்துக்கடவு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கார்த்திக், மகேஷ் குமார், மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...