வால்பாறை ஆழியார் சாலையில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானைகள்

சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கார் கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது. இதில் காரில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியார் பகுதியில் சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையில் உலாவி வருகிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு வால்பாறையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆம்னி காரை பழனிக்கு வாடகைக்கு சென்றுவிட்டு மீண்டும் வால்பாறைக்கு வந்து கொண்டு இருந்தார். சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது.

இதில் காரின் கண்ணாடி கதவு முற்றிலும் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை சாமர்த்தியமாக ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநர் வால்பாறை வந்து சேர்ந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரவு நேரத்தில் ஆழியாறு சாலையில் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...