பெரியநாயக்கன்பாளையத்தில் மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகள்-500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் நண்பர்கள் சதுரங்க குழு இணைந்து மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகளை நடத்தியது.



கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஜூனியர் மற்றும் மற்றும் ஓப்பன் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செஸ் போட்டிகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகரச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் ரகுநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமராஜ், ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், கோவை மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆறுமுகம் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...