பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் நண்பர்கள் சதுரங்க குழு இணைந்து மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகளை நடத்தியது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஜூனியர் மற்றும் மற்றும் ஓப்பன் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செஸ் போட்டிகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகரச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் ரகுநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமராஜ், ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், கோவை மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆறுமுகம் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஜூனியர் மற்றும் மற்றும் ஓப்பன் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செஸ் போட்டிகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகரச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் ரகுநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமராஜ், ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், கோவை மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆறுமுகம் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.