கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்(SSTA) கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (பிப்.26) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அதன்படி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஊதிய குழுவின் செயல்முறைகளின் படி ஒரு குழுவிற்கு ஒரு அடிப்படை ஊதியம் தான் கொடுக்க வேண்டும் எனவும், ஆனால் ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு வகையான அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 8370 ரூபாய் ஊதியமும், அதன் பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 5200 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது என தெரிவித்த அவர்கள், இதனால் சுமார் 3000 ரூபாய் க்கு மேல் முரண்பாடு ஏற்படுவதாகவும், இந்த ஊதிய முரண்பாட்டை உடனடியாக கலைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தவர்கள் வேலை நாட்களில் போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...