வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். மாரிமுத்து என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தினேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் தினேஷ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனிருந்த மாரிமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தினேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் தினேஷ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனிருந்த மாரிமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.