கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் 48வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்ரல் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை வரை ஆறாட்டு திருவீதி உலாவுடன் இவ்விழா நிறைவடையவுள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் இளம்பரிதி கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

48வது ஆண்டு திருவிழாவில் ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மாலை நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

திங்களன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு உறுப்பினர் அஜய் தலைமையில் கோழிக்கோடு மிமிக்ஸ் அல்டரா குழுவினரின் செமி கிளாசிக்கல் நடனம் 'நாட்டிய சிலை' கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.


கொடியேற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் இளம்பரிதி கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

48வது ஆண்டு திருவிழாவில் ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மாலை நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

திங்களன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு உறுப்பினர் அஜய் தலைமையில் கோழிக்கோடு மிமிக்ஸ் அல்டரா குழுவினரின் செமி கிளாசிக்கல் நடனம் 'நாட்டிய சிலை' கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
