அணையின் நீர்மட்டம் 68.85 அடியாக குறைந்ததால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறை செல்வதற்கு போடப்பட்ட தார் சாலை வெளியே தெரிகிறது. இதனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியதால் பிஏபி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் (பிப்.25) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.85 அடியாக குறைந்ததால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறை செல்வதற்கு போடப்பட்ட தார் சாலை வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் கடந்தும் காட்சி தரும் பாலம், தார் சாலையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.