தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும்- பொள்ளாச்சியில் உள்ள கல்லூரி மாணவிகள் வேண்டுகோள்

மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால் போதை பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: புற்றுநோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் KM கேன்சர் மருத்துவமனை மற்றும் NGM கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப் பொருள் பயன்பாடு காரணமாக மாணவ, மாணவர்கள் தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். மேலும் மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால் போதை பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். NGM கல்லூரியில் தொடங்கிய பேரணி பாலக்காடு சாலை, மத்திய பேருந்து, நிலையம், கோவை சாலை, புதிய திட்ட சாலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

போதை பழக்க வழக்கம் என்பது மிகவும் மோசமான செயல் அதைப் பின்பற்றாமல் இருப்பது நமது கையில் தான் உள்ளது. போதை பழக்க வழக்கங்களுக்கு கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அடிமையாக உள்ளனர். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே முதலில் போதை பொருள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இது போன்ற செயல்களில் இருந்து விடுபட முடியும் மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...