பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரியும் மனு அளிக்கப்பட்டது.
கோவை: வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் தினேஷ் என்பவர் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மாரிமுத்து என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூய்மை பணியாளர் தினேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர் தினேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.