வால்பாறையில் அருகே வாழை தோட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டவிரோதமாக விற்கப்படும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுகிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுபோன்று கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...