வாலாங்குளம் பகுதியில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

தமிழகத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளுர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சுற்றுலாத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வாலாங்குளம் பகுதியில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், இன்று (02.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போதுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,



தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அனைத்துத்துறைகளிலும் பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் படி, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தமிழக சுற்றுலாத்துறையானது இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உள்ளுர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சுற்றுலாத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலாங்குளம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்பு மாற்று இடத்தில் படகு இல்லமானது உரிய வாகனநிறுத்துமிடம் மற்றும் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சுற்றுலா அலுவலர் (LT) துர்காதேவி, குணசேகரன், மேலாளர் ராஜகுரு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...