தாராபுரம் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழாவை நகர திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில் அண்ணா சிலை அருகே திமுக கட்சி சின்னம் பதிக்கப்பட்ட 71 கிலோ கேக் வெட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு கொடுத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.



இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை வழங்கி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



இதற்கு முன்னதாக அண்ணா சிலை முன்பு 70 அடி திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் அவைத்தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர் தவச்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன்,தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அபிராமி கார்த்தி, ஹைடெக் அன்பழகன், சாஜிதா பானு, ராஜேந்திரன், முத்துலட்சுமி, பிலோமினா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...