உடுமலை அருகே திருமூர்த்தி மலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் கோவில் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய திருமூர்த்தி மலை பகுதியில் பொன்னாலம்மன் சோலை உள்ளது. தளி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தோட்டத்து சாலைகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் மலை அடிவாரப் பகுதியில் பொன்னாலம்மனுக்கு கோவில் எழுப்பி காலம் காலமாக வழிபாடு வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. கோவிலில் பொன்னாலம்மன் பரிவார கடவுள்களான விநாயகர், முருகன், சப்த கன்னிகள், கருப்பராயனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.



கோவிலில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வேள்வியும் பொன்னாலம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.



இதையடுத்து பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கிடுசாமி, தண்டபாணி, ஈஸ்வரசாமி, தேவராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...