பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக நூதன பிரச்சாரம்

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம்ரூபாய் போடுவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவேன் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிரதமர் மோடி பின்னர் எதையும் செயல்படுத்தாமல் வாயில் வெறும் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உளுந்து வடையை குவித்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பிரதமர் மோடி சொன்ன திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...