கோவை மாவட்டம், ஆலந்துரை பஞ்சாயத்தின் சார்பில் அப்பகுதிக்கு ஒரு மின்மயானம் வேண்டும் என பல்வேறு காலமாக கோரிக்கைகள் எழுந்துவந்தது. அக்கோரிக்கையை ஏற்று ஈஷா அறக்கட்டளையும், லயன்ஸ் கிளப்பும் இணைத்து புதிய மின்மயானம் ஆலந்துறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோம்புலிபாளையம் என்னும் பகுதியில் திறக்கப்பட்டது.

இந்த மின்மயானம் அமைக்க ஈஷா அறக்கட்டளையின் சார்பில் ரூ.27 லட்சமும், லயன்ஸ் கிளப்பின் சார்பில் கட்டுமான பொருட்களும், வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தார்.

இந்த மின்மயானத்தினை ஈஷா அறக்கட்டளையே பொறுப்பேற்று நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், துடியலூர், போத்தனுர், வீரகேரளம், காரமடை, தொண்டாமுத்தூர் மற்றும் சென்னையில் மைலாப்பூர், நெசப்பாக்கம் ஆகிய 8 பகுதிகளில் ஈஷா அறக்கட்டளை மின்மயானத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மின்மயானம் அமைக்க ஈஷா அறக்கட்டளையின் சார்பில் ரூ.27 லட்சமும், லயன்ஸ் கிளப்பின் சார்பில் கட்டுமான பொருட்களும், வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தார்.

இந்த மின்மயானத்தினை ஈஷா அறக்கட்டளையே பொறுப்பேற்று நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், துடியலூர், போத்தனுர், வீரகேரளம், காரமடை, தொண்டாமுத்தூர் மற்றும் சென்னையில் மைலாப்பூர், நெசப்பாக்கம் ஆகிய 8 பகுதிகளில் ஈஷா அறக்கட்டளை மின்மயானத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.