போக்குவரத்துக்கு பூங்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் துவக்கி வைத்தார்


கோவை பி ஆர் எஸ் மைதானத்தில் உள்ள போக்குவரத்துக்கு பூங்காவில் (ட்ராபிக் பார்க்) இன்று இரண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலைவிதிகள் கடைபிடிப்பது, முறையாக சைக்கிள் ஓடுவது ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அமல்ராஜ் பேசுகையில், விபத்து என்பது அனைவருக்கும் நடக்கக் கூடியதே ஆகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விபத்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்த விபத்துக்கு முன்பு நாம் சாலைவிதிகளை கடைபிடித்தோமா என்பதுதான் கேள்வி?. சாலை விதிகளை அடுத்தவர் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி நம் பாதுகாப்பிற்காகவே கடைபிடிக்க வேண்டும்.



கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சாலைவிதிகளை மீறியவர்கள் ஆகும்.



இன்று குழந்தைகளாக உள்ள நீங்களே நாளை சாலையில் வாகனத்தை இயக்கப்போகிறீர்கள். அதற்காக இன்று முதலே சாலைவிதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், உதவி ஆணையர் கொடி செல்வன் (கிழக்கு), ஆய்வாளர் ஐயர்சாமி (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...