பி.எஸ்.ஜி கல்லூரியின் இரு வளாகங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாலம் இன்று (மார்ச்.04) முற்றிலும் அகற்றப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை அண்ணாசிலை முதல் சித்ரா வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகே உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியின் இரு வளாகங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாலம் இன்று (மார்ச்.04) முற்றிலும் அகற்றப்பட்டது. இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது.