இந்தாங்க மோடி சுட்ட வடை எடுத்துக்கோங்க என கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம், கருப்பு பணம் ஒழிப்பு, மீனவர் பாதுகாப்பு, இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, அதனை காற்றில் பறக்க விட்டுவிட்டார் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள், பல்வேறு வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து, வாக்காள பெருமக்களை வாக்குக்காக வெகுவாக ஈர்க்கின்றனர்.

இந்த நிலையிலே, கோவை சாய்பாபா காலனி பகுதியில் திமுக தலைமை இட்ட உத்தரவின் அடிப்படையில், நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து பிரதமர் மோடி ஏமாற்றுகின்றார் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பிரச்சாரம் சாய்பாபா காலனி பகுதியில் வீடுகள், கடைகளில் நடத்தினார்கள்.



நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம், கருப்பு பணம் ஒழிப்பு, மீனவர் பாதுகாப்பு, இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, அதனை காற்றில் பறக்க விட்டார்.

வாயில் வடை சுடுவதாக, வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, அதனை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றுவதாக பிரச்சாரத்தில் ஈடுப்ட்டனர் . பாசிச ஆட்சி பாஜக ஆட்சி மோடி தலைமையில் நடப்பதாக தெரிவித்து அவர்கள் நூதன முறையில் வீடு வீடாக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . மோடி சுட்ட வடை இந்தாங்க என தெரிவித்து, ஊட்டி விட்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...