மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சியின் 2024- 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்புக் கூட்டம் 08.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாநகராட்சியின் 2024- 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்புக் கூட்டம் 08.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேற்று (மார்ச்.04) தெரிவித்துள்ளார்.