கோவையில் கனிம வளங்களை அனுமதியின்றி எடுத்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பேரூா் வட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்தூா், வெள்ளிமலைப்பட்டிணம், விராலியூா், தேவராயபுரம், வெள்ளருக்காம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலையடிவாரங்களில் கிராவல் மண், செம்மண் அனுமதியின்றி வெட்டி எடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.

கனிம வளங்களை முறையற்ற வகையில் வெட்டி எடுப்பதைத் தடுக்க வட்ட அளவில் ‘டாஸ்க் போலீஸ்’ ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா், வனத் துறையினா், கனிம வளத் துறையினா், பொதுப் பணித் துறையினா் உள்ளனா்.

தேவராயபுரத்தில் 3,121 க.மீ. மண் அனுமதியின்றி வெட்டி எடுத்த நில உரிமையாளா் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் ரமேஷ், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதனுக்கு மார்ச் 1 -ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் அனுமதியின்றி மண் எடுத்ததற்காக 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 59 வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முறையற்ற வகையில் மண், கல் எடுத்ததற்காக கனிம வளத் துறையினா் அறிக்கையின்பேரில், நில உரிமையாளா்கள் மீது பொள்ளாச்சி சார் ஆட்சியரால் ரூ.34.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதித்த அளவுக்கு கூடுதலாக மண் எடுத்துச் சென்றதாக 190 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...