கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ராஜா என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
கோவை: பொள்ளாச்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவு பெற்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ராஜாவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவு பெற்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ராஜாவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.